கீத்தா பரமானந்தன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாழ்க்கையெனும் ஓடம்

அலையிடையே படகாய் அனுதினமும் ஓட்டம்
நிலையற்ற கணங்களிடை நித்திய போராட்டம்
விலையற்ற ஆயுளை விதைக்கின்ற நோக்கம்
வலையிடையே மீனாகத் துடித்திடும் வாட்டம்

திசையறியாப் படகாய் தொடர்ந்திடும் பயணம்
விசையாகும் நம்பிக்கை உந்திடும் படகை
பசையாக ஒட்டுவர் பச்சோந்திகள் நடுவில்
அசையாத மனமோ பாறையாய் நிமிரும்

வஞ்சகர் துரோகம் புயலாகி விரட்டும்
அஞ்சிடில் தடுமாற்றம் அகழியாய்ப் புதைக்கும்
கெஞ்சிடும் இதயம் கரையினைத் தேடி
நெஞ்சுரம் ஒன்றே விடிவெள்ளி காணும்

கீத்தா பரமானந்தன்1

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading