மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

கீத்தா பரமானந்தன்

திமிர்
அடங்கா மனத்தின்
ஆணவ ஆட்டம்
கடமை கண்ணியம்
கருத்தினில் அகற்றி
மடமைத் திரையாய்
மனத்தினை ஆட்டி
விடமாய் எழுந்தே
வீழ்த்திடும் திமிர்!

தானே மேலெனும்
தற்குறி யாகி
மானாய் மயிலாய்
மயக்கும் பிஞ்சும்
ஊனும் உயிரும்
உருக்கி அழித்திட
வீணே எழுந்திடும்
விதண்டா வாதம் திமிர்!

தன்நலம் ஒன்றே
தரணி வாழ்வாய்
உண்ணியாய் ஒட்டி
உருட்டிப் பிரட்டி
எண்ணிய முடிக்கும்
திண்ணிய பாணம் திமிர்!

கீத்தா பரமானந்தன்07-03-2022

Nada Mohan
Author: Nada Mohan