கணப்பொழுதில்

கணப்பொழுதில்.. சிவருபன் சர்வேஸ்வரி கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி முடிக்கும் காரியம் தெரியாதவர்...

Continue reading

கீத்தா பரமானந்தன்

மௌனம்!

மொழியில்லா வேதமாய்
மொழிந்திடும் பாடம்
மலையெனும் சுமையும்
மாற்றிடும் அமிர்தம்
வரும்பகை அகற்றும்
வலிமையாம் பாணம்
கலையிதைக் கற்றால்
கணங்களும் இன்பம்!

கண்களில் பேசிக்
காரியம் முடித்துக்
காதலின் தூதாய்க்
கனவுகள் வளர்க்கும்!
ஆழ்கடல் ஆகி
ஆட்டியும் வைக்கும்
ஆயிரம் அர்த்தத்தை
அமைதியாய்ச் சொல்லும்!

மோனத்தின் எழிலாய்
மூர்க்கத்தைக் குறைத்திட
ஞானிகள் நவின்ற
ஞாலத்தின் பாடம்!
பாதைகள் மாற்றிப்
பாடமும் நடத்தும்
கீதையாய் நின்றே
கீர்த்தியைப் புகட்டும்!

மௌனத்தை வெல்லும்
மொழியேதும் இல்லை
மனங்களைப் புடமிடும்
மகத்துவம் இதுவாய்!

மௌனம்!

மொழியில்லா வேதமாய்
மொழிந்திடும் பாடம்
மலையெனும் சுமையும்
மாற்றிடும் அமிர்தம்
வரும்பகை அகற்றும்
வலிமையாம் பாணம்
கலையிதைக் கற்றால்
கணங்களும் இன்பம்!

கண்களில் பேசிக்
காரியம் முடித்துக்
காதலின் தூதாய்க்
கனவுகள் வளர்க்கும்!
ஆழ்கடல் ஆகி
ஆட்டியும் வைக்கும்
ஆயிரம் அர்த்தத்தை
அமைதியாய்ச் சொல்லும்!

மோனத்தின் எழிலாய்
மூர்க்கத்தைக் குறைத்திட
ஞானிகள் நவின்ற
ஞாலத்தின் பாடம்!
பாதைகள் மாற்றிப்
பாடமும் நடத்தும்
கீதையாய் நின்றே
கீர்த்தியைப் புகட்டும்!

மௌனத்தை வெல்லும்
மொழியேதும் இல்லை
மனங்களைப் புடமிடும்
மகத்துவம் இதுவாய்!

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் செல்லாக்காசு புவனத்தில் பலநாட்டின் நாணய மதிப்பு புழங்கிடும் பல்வேறு நாமத்தின் சிறப்பு பலநாட்டின் பணத்தால் பாரிய விரிசல் பதுக்கிய...

    Continue reading