கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

கீத்தா பரமானந்தன்

மௌனம்!

மொழியில்லா வேதமாய்
மொழிந்திடும் பாடம்
மலையெனும் சுமையும்
மாற்றிடும் அமிர்தம்
வரும்பகை அகற்றும்
வலிமையாம் பாணம்
கலையிதைக் கற்றால்
கணங்களும் இன்பம்!

கண்களில் பேசிக்
காரியம் முடித்துக்
காதலின் தூதாய்க்
கனவுகள் வளர்க்கும்!
ஆழ்கடல் ஆகி
ஆட்டியும் வைக்கும்
ஆயிரம் அர்த்தத்தை
அமைதியாய்ச் சொல்லும்!

மோனத்தின் எழிலாய்
மூர்க்கத்தைக் குறைத்திட
ஞானிகள் நவின்ற
ஞாலத்தின் பாடம்!
பாதைகள் மாற்றிப்
பாடமும் நடத்தும்
கீதையாய் நின்றே
கீர்த்தியைப் புகட்டும்!

மௌனத்தை வெல்லும்
மொழியேதும் இல்லை
மனங்களைப் புடமிடும்
மகத்துவம் இதுவாய்!

மௌனம்!

மொழியில்லா வேதமாய்
மொழிந்திடும் பாடம்
மலையெனும் சுமையும்
மாற்றிடும் அமிர்தம்
வரும்பகை அகற்றும்
வலிமையாம் பாணம்
கலையிதைக் கற்றால்
கணங்களும் இன்பம்!

கண்களில் பேசிக்
காரியம் முடித்துக்
காதலின் தூதாய்க்
கனவுகள் வளர்க்கும்!
ஆழ்கடல் ஆகி
ஆட்டியும் வைக்கும்
ஆயிரம் அர்த்தத்தை
அமைதியாய்ச் சொல்லும்!

மோனத்தின் எழிலாய்
மூர்க்கத்தைக் குறைத்திட
ஞானிகள் நவின்ற
ஞாலத்தின் பாடம்!
பாதைகள் மாற்றிப்
பாடமும் நடத்தும்
கீதையாய் நின்றே
கீர்த்தியைப் புகட்டும்!

மௌனத்தை வெல்லும்
மொழியேதும் இல்லை
மனங்களைப் புடமிடும்
மகத்துவம் இதுவாய்!

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading