புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

கீத்தா பரமானந்தன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
திருநங்கை!

படைத்தவன் செய்த
பாரிய தவறால்
இடரது கண்டே
இழுபடும் ஆயுள்!
உடையதன் உள்ளே
உலையெனும் உள்ளம்
விடையதைக் காண
விடுதலை நாடும்!

வக்கிரப் பேச்சும்
வார்த்தையின் கணையும்
உக்கிர வாளாய்
உள்ளத்தைப் பிளக்க
நித்தமும் வதைக்கும்
நீசமாம் உலகை
வித்தகம் கொண்டே
வென்றிடும் பிறவிகள்!

ஆணொடு பெண்ணாய்
ஆண்டவன் காண்போர்
ஆணினில் பெண்ணை
அலியெனப் பழிப்பார்!
வீணரின் பேச்சை
வீசியே தள்ளி
விடியலைக் காண்கின்றார்
வீறுடை திருநங்கை!

தவறேதும் செய்யாத்
தண்டனைக் கைதியாய்
இவர்களை வாட்டாது
துணையதைத் தந்தே
துளிர்த்திட வைக்க
மனிதரின் நேயமாய்
மனங்கொண்டு தொடர்ந்தே
ஏற்றிடுவோம் இவரை!

கீத்தா பரமானந்தன்02-07-23

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading