மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

கீத்தா பரமானந்தன்

மீண்டெழு!
வாழ்க்கை என்பது வரையாத புதிராய்
தாழ்விலிம் உயர்விலும் தந்திடும் பாடத்தை!
ஆழக் கடலிடை ஆயிரம் முத்துண்டு
ஆக்கிடும் முயற்சியே ஆரமென் றாக்கிடும்!

வலியெனக் கிடந்திட்டால் வழியது முடங்கும்
வனப்பினைப் பறித்து வாட்டியே வதைக்கும்!
உளிபடும் கல்லே உலகினில் சிலையென
உறுதியாய் நின்றிட உயர்வுகள் வசப்படும்!

நிரந்தரம் என்பது நிசத்தினில் இல்லை
நிமிர்வுடன் தொடர்ந்திட அகன்றிடும் தொல்லை!
வரமுடை பிறப்பிது வருந்தலை விட்டிடு
வரலாறை நிறுத்திட வாகையாய் மீண்டெழு!

கீத்தா பரமானந்தன்16-10-23

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading