சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

கீத்தா பரமானந்தன்

மீண்டெழு!
வாழ்க்கை என்பது வரையாத புதிராய்
தாழ்விலிம் உயர்விலும் தந்திடும் பாடத்தை!
ஆழக் கடலிடை ஆயிரம் முத்துண்டு
ஆக்கிடும் முயற்சியே ஆரமென் றாக்கிடும்!

வலியெனக் கிடந்திட்டால் வழியது முடங்கும்
வனப்பினைப் பறித்து வாட்டியே வதைக்கும்!
உளிபடும் கல்லே உலகினில் சிலையென
உறுதியாய் நின்றிட உயர்வுகள் வசப்படும்!

நிரந்தரம் என்பது நிசத்தினில் இல்லை
நிமிர்வுடன் தொடர்ந்திட அகன்றிடும் தொல்லை!
வரமுடை பிறப்பிது வருந்தலை விட்டிடு
வரலாறை நிறுத்திட வாகையாய் மீண்டெழு!

கீத்தா பரமானந்தன்16-10-23

Nada Mohan
Author: Nada Mohan