கீத்தா பரமானந்தன்

விருப்பு! சந்தம் சிந்தும் சந்திப்பு!

வாழ்வின் துருப்பாகி
வலைவீசும் மூர்க்கம்
காழ்ப்பை உருவாக்கும்
கடிவாளமில்லா ஊக்கம்!
தோப்பாகி நிலைப்பதற்கும்
துணையாகும் பாகம்
ஆப்பாகி வீழ்த்திடும்
அகன்றிடும் போதில்!

விருப்பதே வாழ்வாய்
வீறுடை கணமாய்
ஒறுப்புக்கள் தாங்கி
உயர்த்திடும் ஏணியாய்!
விருப்புடை உழைப்பு
விண்ணையும் முட்டும்
பொறுப்புடை மனிதனாய்ப்
பூமியில் நிறுத்தும்!

மருப்பினை ( மயக்கம்) விட்டு
விருப்பினைக் கொண்டோரே
பெருக்கமாய் நிலைத்தே
பேசுபொருள் ஆனார்
தருக்களாய் உயர்ந்தார்
தரணியில் வரலாறாய்!

கீத்தா பரமானந்தன்30-01-2023

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading