மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

கீத்தா பரமானந்தன்

நிலாவில் உலா!

கொஞ்சிவரும் ஒளியாகக்
கோலமிடும் உறவாக
நெஞ்சமதை நிறைவாக்கும்
நித்திலத்தின் கனவே!
விஞ்சுகின்ற காதலுக்கே
விரைந்திடுவாய் தூதாக
மஞ்சமிட்டே நிறைகின்றாய்
மதியொளியே எமக்காக!

சொந்தமெனச் சுற்றுகிறேன்
சொக்கியுமே இரசிக்கின்றேன்!
அந்தியதன் துணையாக
அஞ்சுதலைப் போக்குகிறாய்
சிந்தையது இனித்திடவே
சிந்துகின்றாய் கவியாகி
வந்தனையாம் வான்நிலவே
வாஞ்சையுள்ள பேரெளிலே!

கற்பனை கடந்திட்ட
கந்தர்வ எழிலே
விஞ்ஞானம் மெஞ்ஞானம்
எல்லாமும் இன்பமுடன்
நிலாவே உன்னுடனே உலா!

கீத்தா பரமானந்தன்18-12-23

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading