சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

கீத்தா பரமானந்தன்

சந்தம் சிந்தும்சந்திப்பு!
பங்குனி!

தங்கியகுளிர் விரட்டித்
தரணி கதகதக்கத்
திங்களின் மூன்றாகித்
தித்திப்பாய் வருபவளே
பங்குனியே என்வாழ்வின்
பங்காய் நீயும்
பவனுகின்ற உறவென்றே
பரவசமாய்க் காத்திருப்பில்!

சிட்டுக்கள் பாடும்
சீதளம் வீசும்
மொட்டைத் தருக்களில்
முகையிடும் அரும்பும்
கொட்டிடும் மேளம்
கூடும் திருமணம்!
எட்டிய பசுமை
எழிலுடன் மீளும்!

சுற்றிடும் வாழ்வின்
சுந்தரத் துடுப்பாய்ப்
பற்றியே தொடரும்
பக்கத் துணையும்
பக்கத்தில் என்றும்
பாங்கான பங்கு நீ!

கீத்தா பரமானந்தன்
19-02-24

Nada Mohan
Author: Nada Mohan