கீத்தா பரமானந்தன்

பணம் !

பணமே உலகின் உயிர்நாடி
கணமும் உருட்டுது பின்னாடி
மனமும் அதற்குள் அடமானம்
மண்டியிட்டே தினம் யாகம்
பட்டமும் பதவியும் பணத்தாலே
சட்டமும் அதற்கு விலையாகும்
வட்டிகுட்டி பெயர் தாங்கி
உயிரையும் பறிக்குது இரையாக்கி

தாயும் பிள்ளையும் வேறாக்கி
தனித்து வைக்குது சொத்தாகி
நினைத்த செயல்கள் அத்தனையும்
முடித்து வைக்குது பணக்கடதாசி
பாசத்தையும் வேசமாக்கி
நேசத்தையும் நிர்மூலமாக்கி
வேசதாரிகளையும் வேந்தனாக்கி
வேடிக்கை காட்டுது விபரீதமாக்குது

உயிர்க்கும் ஆசைகளின் மூலதனம்
அழிக்கும் அவலங்களின் பிறப்பிடம்
துளிர்க்கும் துவேசங்களின் தரிப்பிடம்
களிப்பே தேடும் கருணையற்ற பணம்

கீத்தா பரமானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading