பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

கீத்தா பரமானந்தன்

பணம் !

பணமே உலகின் உயிர்நாடி
கணமும் உருட்டுது பின்னாடி
மனமும் அதற்குள் அடமானம்
மண்டியிட்டே தினம் யாகம்
பட்டமும் பதவியும் பணத்தாலே
சட்டமும் அதற்கு விலையாகும்
வட்டிகுட்டி பெயர் தாங்கி
உயிரையும் பறிக்குது இரையாக்கி

தாயும் பிள்ளையும் வேறாக்கி
தனித்து வைக்குது சொத்தாகி
நினைத்த செயல்கள் அத்தனையும்
முடித்து வைக்குது பணக்கடதாசி
பாசத்தையும் வேசமாக்கி
நேசத்தையும் நிர்மூலமாக்கி
வேசதாரிகளையும் வேந்தனாக்கி
வேடிக்கை காட்டுது விபரீதமாக்குது

உயிர்க்கும் ஆசைகளின் மூலதனம்
அழிக்கும் அவலங்களின் பிறப்பிடம்
துளிர்க்கும் துவேசங்களின் தரிப்பிடம்
களிப்பே தேடும் கருணையற்ற பணம்

கீத்தா பரமானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading