கீத்தா பரமானந்தன்

நிர்மூலம்!சந்தம் சிந்தும் சந்திப்பு
பெண்மூலம் நிர்மூலம்
பேச்சொலிகள் கேட்டுக் கேட்டே
வண்ணக் கனவுகளை
வலிகளுக்குள் புதைதிட்ட
எண்ணற்ற கன்னியரின்
இதயத்தின் குமுறல்கள்
இளமையின் ஏக்கங்கள்
மூடத்தனத்தின் முடிவிலியாய்
முடிகிறதே நிர்மூலமாய்!

அன்றுதொட்டு இன்றுவரை
உச்சத்தில் வாழ்வதற்காய்ப்
பச்சோந்திக் கூட்டத்தின்
காட்டிக் கொடுப்பாலே
தன்மானம் கொண்டெழுந்த
தன்னிகரில்லா வேங்கைகளின்
பொன்னான ஆயுளெல்லாம்
போனதுவே நிர்மூலமாய்!

வெளிநாட்டு வாசமில்லை
விநயமாய் இரந்ததில்லை
கண்ணியதின் நிமிர்வுடனே
களிகொண்டு வாழ்ந்திருந்த
எளிலான சோலைகளும்
எடுப்பான மாடங்களும்
கட்டாக் காலிகளின்
கணக்கற்ற பாச்சலினால்
கண்டது நிர்மூலம்!

கீத்தா பரமானந்தன்
20-05-24

Nada Mohan
Author: Nada Mohan

    சந்த கவி இலக்கம்_215 சிவாஜினி சிறிதரன் "நல்லுறவு" பொறுமை சகிப்பு தன்மை இரண்டும் தெய்வீக குணங்கள் இதற்கு எஞ்சிய நற்குணம் ஏது...

    Continue reading

    ராணி சம்பந்தர் நாலும் சேர்க்குமே நல்லுறவு அல்லும் பகலுமே பாடுபடவே கல்லும் கனியாகும் கூட்டுறவு சொல்லும் செயலும் பல்லுறுதி கொல்லும்...

    Continue reading