தன்னம்பிக்கை 82

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 22-01-2026 சுற்றியிருக்கும் இருள் சூறையாட நினைத்தால் துணிவெனும் தீச்சுவாலை கொழுந்து விட்டெரியட்டும்! விழுந்தால் எழுவாய் விதிதனை வெல்வாய் விடியும்...

Continue reading

கீத்தா பரமானந்தன்

சந்தம் சிந்தும் சந்திப்பு!
பெண்ணே !
பெறுமதியாம் பெருநிதியாய்ப்
பெண்ணவளே யென்றும்
பெறுவதெல்லாம் துன்பமாயும்
புரள்வதில்லைப் பாதை!
முறுவலதே இவள்வாழ்வின்
முகவரியாய்க் கொண்டே
முழுமதியா யெப்போது
முலவுகின்ற தன்மை!
நிறுவுகிறாள் எங்கணுமே
நித்தியமும் தன்னை
நிலமகழும் தோற்றிடுவாள்
இவள்பொறுமை முன்னே!
உறுதியுடன் எட்டுகிறாள்
உயரங்கள் நாளும்
உணர்வினிலே நிறைத்ததெல்லாம்
ஆக்கலெனும் நாதம்!

சந்தணமாய் யுரைபட்டே
சாற்றுகின்ற மேன்மை
சத்தமின்றித் தருவதெல்லாம்
உள்ளத்தின் தூய்மை!
பந்தமெனக் கொள்வதெல்லாம்
பாசமதன் தேவை
பரவசமே தருகின்றாள்
பாரதனிற் பெண்ணே!
அந்தமில்லா வருளாகி
யாக்குகின்ற தாய்மை
அல்லலின்றி ஆயுளெல்லாம்
நிறைக்கட்டு மின்பம்!

கீத்தா பரமானந்தன்

சந்தம் சிந்தும் சந்திப்பு!
பெண்ணே !
பெறுமதியாம் பெருநிதியாய்ப்
பெண்ணவளே யென்றும்
பெறுவதெல்லாம் துன்பமாயும்
புரள்வதில்லைப் பாதை!
முறுவலதே இவள்வாழ்வின்
முகவரியாய்க் கொண்டே
முழுமதியா யெப்போது
முலவுகின்ற தன்மை!
நிறுவுகிறாள் எங்கணுமே
நித்தியமும் தன்னை
நிலமகழும் தோற்றிடுவாள்
இவள்பொறுமை முன்னே!
உறுதியுடன் எட்டுகிறாள்
உயரங்கள் நாளும்
உணர்வினிலே நிறைத்ததெல்லாம்
ஆக்கலெனும் நாதம்!

சந்தணமாய் யுரைபட்டே
சாற்றுகின்ற மேன்மை
சத்தமின்றித் தருவதெல்லாம்
உள்ளத்தின் தூய்மை!
பந்தமெனக் கொள்வதெல்லாம்
பாசமதன் தேவை
பரவசமே தருகின்றாள்
பாரதனிற் பெண்ணே!
அந்தமில்லா வருளாகி
யாக்குகின்ற தாய்மை
அல்லலின்றி ஆயுளெல்லாம்
நிறைக்கட்டு மின்பம்!

கீத்தா பரமானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

    Continue reading