வரமாகும் வாய்ப்புகளே

ராணி சம்பந்தர் வரமாகும் வாய்ப்புகளே விழித்திட உரமாகும் ஆய்வுகள் துளிர்த்திடும் சோரமாகும் வேண்டா வெறுப்பிலே பாரமாகும் தேய்வுகள் அழித்திடும் தரமாகும்...

Continue reading

வரமாகும் வாய்ப்புகளே..

வியாழன் கவி 2296 வரமாகும் வாய்ப்புகளே!!! வரமாகும் வரவுமாகும் சிரமேல் தாங்கினால் சிறப்புமாகும் சீராகும் காற்று வீசும் திசை போல் கடினம்...

Continue reading

வரமாகும் வாய்ப்புக்களே…

வசந்தா ஜெகதீசன் வரமாகும்வாய்ப்புகளே.... வாழ்வெனும் மலர்த்தோப்பு மலர்ந்திடும் வேளை வரங்கள் பல எமதாகும் வாய்ப்பிற்குள் நாளை இருசுடராய்...

Continue reading

கீத்தா பரமானந்தன்

சந்தம் சிந்தும் சந்திப்பு!
பெண்ணே !
பெறுமதியாம் பெருநிதியாய்ப்
பெண்ணவளே யென்றும்
பெறுவதெல்லாம் துன்பமாயும்
புரள்வதில்லைப் பாதை!
முறுவலதே இவள்வாழ்வின்
முகவரியாய்க் கொண்டே
முழுமதியா யெப்போது
முலவுகின்ற தன்மை!
நிறுவுகிறாள் எங்கணுமே
நித்தியமும் தன்னை
நிலமகழும் தோற்றிடுவாள்
இவள்பொறுமை முன்னே!
உறுதியுடன் எட்டுகிறாள்
உயரங்கள் நாளும்
உணர்வினிலே நிறைத்ததெல்லாம்
ஆக்கலெனும் நாதம்!

சந்தணமாய் யுரைபட்டே
சாற்றுகின்ற மேன்மை
சத்தமின்றித் தருவதெல்லாம்
உள்ளத்தின் தூய்மை!
பந்தமெனக் கொள்வதெல்லாம்
பாசமதன் தேவை
பரவசமே தருகின்றாள்
பாரதனிற் பெண்ணே!
அந்தமில்லா வருளாகி
யாக்குகின்ற தாய்மை
அல்லலின்றி ஆயுளெல்லாம்
நிறைக்கட்டு மின்பம்!

கீத்தா பரமானந்தன்

சந்தம் சிந்தும் சந்திப்பு!
பெண்ணே !
பெறுமதியாம் பெருநிதியாய்ப்
பெண்ணவளே யென்றும்
பெறுவதெல்லாம் துன்பமாயும்
புரள்வதில்லைப் பாதை!
முறுவலதே இவள்வாழ்வின்
முகவரியாய்க் கொண்டே
முழுமதியா யெப்போது
முலவுகின்ற தன்மை!
நிறுவுகிறாள் எங்கணுமே
நித்தியமும் தன்னை
நிலமகழும் தோற்றிடுவாள்
இவள்பொறுமை முன்னே!
உறுதியுடன் எட்டுகிறாள்
உயரங்கள் நாளும்
உணர்வினிலே நிறைத்ததெல்லாம்
ஆக்கலெனும் நாதம்!

சந்தணமாய் யுரைபட்டே
சாற்றுகின்ற மேன்மை
சத்தமின்றித் தருவதெல்லாம்
உள்ளத்தின் தூய்மை!
பந்தமெனக் கொள்வதெல்லாம்
பாசமதன் தேவை
பரவசமே தருகின்றாள்
பாரதனிற் பெண்ணே!
அந்தமில்லா வருளாகி
யாக்குகின்ற தாய்மை
அல்லலின்றி ஆயுளெல்லாம்
நிறைக்கட்டு மின்பம்!

கீத்தா பரமானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் வரலாறு பலபாகம் வழிகூறும் பலகாலம் தமிழ்ப்பள்ளி உருவாக்கம் தரணிக்கே தனிமகுடம் உறவுகள் ஓன்றாகும் உயிர்ப்பு மொழி தமிழாகும் அடுத்த தலைமுறையும்...

    Continue reading

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading