கீத்தா பரமானந்தம்

சந்தம் சிந்தும் சந்திப்பு
புதிர் !
கழனியதன் விழைச்சலிலே
களிப்பாகும் மனத்தோடு
கனவுகளைச் சேர்த்தெடுத்தே- முதல்
கதிரறுப்பர் புதிரென்றே!
புதிரதுவும் மனையதனில்
பூக்கவைக்கும் இன்பமென
பொறுப்பாகக் கட்டிவத்தே
பொங்கலும் இட்டிடுவர்
பொங்கிடும் நிறைவுகட்காய்!

புதிரான நம்பிக்கைகள்
புவனமெங்கும் மக்களிடை!
பதராகிப் போகாமல்
பக்குவமாய் வாழ்வதற்காய்!
புதிர்போட்டு விடைகேட்டே
புத்திக்கு வேலைதந்து
சித்திகளைப் பெறவைப்பார்
யுத்தியாய்ப் பெரியவர்கள்!

புதிராகிப் போனதுவே
மூத்தோருடன் கூட்டுவாழ்வு
பரிதவிக்கும் இதயமது-இப்
புதிருக்கு விடைதேடிப்
பரிதவித்துத் தனிமையிலே!

கீத்தா பரமானந்தன்16-01-23

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading