வரமானதோ வயோதிபம்

௨௫கி வடிந்த மெழுகாக வாழ்ந்து முடித்த மௌனம் முடங்கிக் கிடக்கும் வாலிபம் முடக்காது துடிக்கும் அனுபவம் ஆளுமையான ப௫வம் அனுபவம்...

Continue reading

வரமானதோ வாயோதிபம்

ஜெயம் தள்ளாமையோடு உடம்புக்கு முடியாமையும் சேரும் அரவணைக்க யாருமில்லா முதியோர்நிலை பாவம் புயலின் நடுவே சிக்கியே மிதப்பு கடலிலும்...

Continue reading

குவலயமும் குளிர்ந்திடுமே

சர்வேஸ்வரி சிவருபன்

குவலயமும் குளிர்ந்திடுமே

தாவிவரும் முகில் கூட்டமேபாவி நிற்க மாட்டாயா
தூவிவிடும் மழைநீரை சேர்த்தனுப்ப மாட்டாயா
ஆவியாகப் பறக்கின்றதே அவனி
சாமிகூடப் பார்த்திருக்கார் பாரு
காமிநீயும் மழைத்துளியை மண்ணில்
சோம்பி மக்கள் கூம்பினர்
சோகம் கொண்டே வீழ்ந்தனர்
சாபம் போட்ட நிலையாகி
சாதிக்கின்றான் கதிரவன் சதிராடி
மாதமும் உச்சம் கொண்டது
நேரமும் நன்றாக அமைந்தது
கூறும் கூற்றை செவிசாய்ப்பாய்
காணும் உந்தன் விளையாட்டு

அமுதம் சிந்தும் நிலையாகி
அமுதமழையைப் பொழிவாயே
குமுதமாக வருவாய் என்றால்
குவலயமும் குளிர்ந்திடுமே
சர்வேஸ்வரி சிவருபன்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

Continue reading