பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

குவலயமும் குளிர்ந்திடுமே

சர்வேஸ்வரி சிவருபன்

குவலயமும் குளிர்ந்திடுமே

தாவிவரும் முகில் கூட்டமேபாவி நிற்க மாட்டாயா
தூவிவிடும் மழைநீரை சேர்த்தனுப்ப மாட்டாயா
ஆவியாகப் பறக்கின்றதே அவனி
சாமிகூடப் பார்த்திருக்கார் பாரு
காமிநீயும் மழைத்துளியை மண்ணில்
சோம்பி மக்கள் கூம்பினர்
சோகம் கொண்டே வீழ்ந்தனர்
சாபம் போட்ட நிலையாகி
சாதிக்கின்றான் கதிரவன் சதிராடி
மாதமும் உச்சம் கொண்டது
நேரமும் நன்றாக அமைந்தது
கூறும் கூற்றை செவிசாய்ப்பாய்
காணும் உந்தன் விளையாட்டு

அமுதம் சிந்தும் நிலையாகி
அமுதமழையைப் பொழிவாயே
குமுதமாக வருவாய் என்றால்
குவலயமும் குளிர்ந்திடுமே
சர்வேஸ்வரி சிவருபன்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading