கெங்கா ஸ்ரான்லி

சித்திரை வந்தாலே
சித்திரை வந்தாலே முத்திரை பதிக்கும்
சித்திகள் கிடைக்கும் சிந்தனை பெருகும்
மக்கள் மனதில் கவலை போகும்
பூக்கள் எல்லாம் பூத்துக் குலுங்கும்
எண்ணிய எண்ணங்கள் திசைமாறும்
நுண்ணிய உயிர்களும் உயஸர்த்தெழும்
பண்ணிய பாவம் பழிதொடர
கண்ணிலே நீரும் கசிந்துருகும்
மானிடர் வாழ்வில் மாற்றம் காண
சித்திரை வந்தாலேசிரிக்கும் உள்ளம்
வருமிடர் விரைந்தோட கற்றதும்
நின்று கண்ணியம் காக்கும்
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி
12.4.23

Nada Mohan
Author: Nada Mohan