புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் கவிதை
சுடர்
சுடர்விட்டு எரியும் மெழுகு திரி
மெழுகு தான்உருகி
மற்றவர்க்கு ஒளிதரும்
சுடரை போன்ற மனிதர் தன்னையிழந்து
மக்களுக்கு உதவி செய்து மகிமை பெறுவர்
பாரதியின் கவிச்சுடர் பார்முழுதும்
பரவிநிற்கிறதே
பாரதிதாசனின் வேட்கை நிறைகவி சுடராகிறதே
சுடரெல்லாம் சுடர்விட்டு பிரகாசிக்கும் உலகில்
சுட்ர்தந்து தம்மையே
உருக்கி விட்டார்
என்தந்தையே் சுடராக இருந்து எம்மை
சுடர்விட்டு பிரகாசிக்க தன்னை இழந்து
தன்னையே தந்தவர் தரணியில் இன்றில்லை
தன்பிள்ளை இன்று தலைநிமிர்ந்து நிற்கிறார் சுடராய்
என்வாழ்வில் சுடராக இருந்தவர் இப்போதில்லை
என்மனதில் ஒளிருகின்றார் எப்பவுமே சுடராக
சுடர்தான் அணைந்தாலும்
சுடர்விடும் நினைவு
எக்கணமும் என்முன்னே நிழலாக
ஊசலாடியே
கெங்கா ஸ்ரான்லி
10.4.23

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading