19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
கெங்கா ஸ்ரான்லி
சந்தம் சிந்தும் கவிதை
யோசி
———-
உங்களுடன் வாழ்ந்த வாழ்க்கை
உள்ளத்திற்கு தந்தது உவகை
தாங்கள் பேசிய வார்த்தை
நங்கியது மனதில் நிலையாய்
நீங்ககள் இருந்தபோது
தெரியவில்லைத் துன்பம்
நீங்கள் போனபின்பு
தெரிந்தது வெறுமை
எதிர்காலம் ஒரே கருமை
மனதிலே நிறைய வறுமை
உங்களைத் தவற விட்டது
யோசிக்கிறேன் விதியா என
இப்படி் நடக்குமென
யோசிக்கவில்லையே நான்
இப்ப யோசித்து அழுகின்றேன்
காலம் கடந்த செயல்
வாழ்க்கை என்றால்
இப்படித் தானோ
அன்பு எல்லாம்
மனதில் தேக்கி
ஆரோக்கியம் பாதுகாத்து
அக்கறை செயலில் காட்டி
பண்பில் நிறைகுடமாய்
முழுமை பெற்ற மனிதர்
யோசிக்கிறேன் நான் இன்னும்
வெறும்குடம்
யோசித்து யோசித்து எனை
இழந்தேன்
யாசித்து கேட்கின்றேன்
என்னவரை
யாசகமாய்க் கடவுளிடம்
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...