புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சுந்தும் கவிதை
அலைஓசை
——-
அலைகளின் ஓசை
அடித்தளத்தில் இல்லை
மேல்தளத்தில் மின்னலென
வந்துபோகும் அலைகள்
அலைகள் மேலே எழும்போது
அலையோசை அதிகமாகும்
அந்த அலையோசையில் ஒரு நாதமும் கேட்கும்
திரண்டு வரும் அலைகள்
திடுக்கிட வைக்கும்
அலையோசையோ காதைப் பிளக்கும்
அலையோசை அமைதியாக கேட்க
கானம் அங்கே பிறக்கும்
அலைகளின் ரீங்காரம்
அன்புள்ளங்களை வருடும் நாதம்
அலைகளின் சலசலப்பில்
எண்ண அலைகள் பெருக்கெடுத்தோட
என்மன அலையோசை
இளையோடி அலைபாய
வண்ணக் கோலமான வாழ்க்கை
வசந்த மின்றி வாட
எண்ணக் கொர்வையது எழிலின்று
போனதே
அலைகள் இருக்கு மட்டும்
அலைஓசை இருக்கும்
என்மன அலைஓசை என்
ஜீவனுள்ள மட்டும் இருக்கும்
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி
6.10.23

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading