ஏரிக்கரைப் பூங்காற்றே

சிவரூபன் சர்வேஸ்வரி ஏரிக்கரைப் பூங்காற்றே ஓடத்தில் இருந்தே உல்லாசமாகப் போகையிலே ஆனந்தப் பூங்காற்று ஆடியும் வருகையிலே பொங்கும் கடலின்...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சுந்தும் கவிதை
அலைஓசை
——-
அலைகளின் ஓசை
அடித்தளத்தில் இல்லை
மேல்தளத்தில் மின்னலென
வந்துபோகும் அலைகள்
அலைகள் மேலே எழும்போது
அலையோசை அதிகமாகும்
அந்த அலையோசையில் ஒரு நாதமும் கேட்கும்
திரண்டு வரும் அலைகள்
திடுக்கிட வைக்கும்
அலையோசையோ காதைப் பிளக்கும்
அலையோசை அமைதியாக கேட்க
கானம் அங்கே பிறக்கும்
அலைகளின் ரீங்காரம்
அன்புள்ளங்களை வருடும் நாதம்
அலைகளின் சலசலப்பில்
எண்ண அலைகள் பெருக்கெடுத்தோட
என்மன அலையோசை
இளையோடி அலைபாய
வண்ணக் கோலமான வாழ்க்கை
வசந்த மின்றி வாட
எண்ணக் கொர்வையது எழிலின்று
போனதே
அலைகள் இருக்கு மட்டும்
அலைஓசை இருக்கும்
என்மன அலைஓசை என்
ஜீவனுள்ள மட்டும் இருக்கும்
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி
6.10.23

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading