புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

பரவசம்

பாமுகப் பூக்கள்
பாமுகத்தில் வெளியீடு பரவசம்..
பாவையின் தொகுப்பில்
சந்தம் சிந்திய கவிதை பரவசம்.
இருபது பேரின் இணைவு
இசைந்த பல கவியின் பரவசம்.
இன்னும் தொடரும் இணைப்பணி.
இனிதே நடப்பதுப ரவசம்.
தைபிறந்தது தரணிக்கு பரவசம்.
தைமகள் வருகை மக்களுக்கு
நிம்மதி கிடைக்கும்
என்ற நம்பிக்கை பரவசம்.
மக்கள் வாழ்வு நோய்நொடியின்றி
சிறக்கட்டும்.
மனிதம் இன்னும் நிலைக்கட்டும்
எல்லோரையும் பாதுகாக்கட்டும்
இதனால் நன்மை கிடைக்கட்டும்
எல்லோரும் பரவசம் அடையட்டும்
மங்கல நிகழ்வுகள் நடக்கட்டும்
மற்றோரை மதித்து நினைக்கட்டும்
தன்னலமற்ற சேவையிலே
தன்னம்பிக்கை பரவசம் பிறக்கட்டும்

கெங்கா ஸ்ரான்லி

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading