கவிதையே தெரியுமா

கவிதையே தெரியுமா காதலின்பம் கவிதையே கனியும் காலமே உனதாக்கி காசினியில் மலர்ந்தாயே கற்பகமே அற்புதமே கலையாத பொக்கிசமே நிற்பதம்...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

பழமை

பழமை தந்த பசுமை நினைவு
புதுமையில் ஒன்றும் பெரிதல்லவே
பழமை பழமை என்று வெறுப்போர்க்கு
பழமையின் சுவை புரிவதில்லையே.

பழைய சோறு கஞ்சி குடிப்பது
பதப் படுத்தும் உடலையென ஆய்வு.
ஆய்வுகள் தேடும் பழமைதானே
அறிவியலில் மிஞ்சி நிற்கிறதே.

எம்முன்னோரது பழமை கண்ட அறிவியல்
இப்புதியவரை ஆளுமைப் படுத்துகிறதே.
எண்ணிப்பார்த்தால் ஆச்சரியம் ஆனால் உண்மை.
இப் பூமிப் பந்தில் உதித்திடும் உண்மை.

பழமை என எதையும் ஒதுக்காமல்
மதித்துப் போற்றல் பொக்கிஷமாகும்.
பழமை தான் என்றும் புதுமையாகும்
இளமையும் ஒரு நாள் பழசாகும்.

கெங்கா ஸ்டான்லி

Nada Mohan
Author: Nada Mohan