தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

நீர்க்குமிழி
———-
கடலில் ஏற்படும் நீர்குமிழி
கணப்பொழுதில் மறைந்து விடும்
அடிக்கடி தோன்றினாலும் அதிகம்
அமிழ்ந்தே விடும் விரைவில்
சிலநினைவுகள் கூட நீர்க்குமிழி
சிலரது வாழ்க்கையும் நீர்க்குமிழி
சில எண்ணங்களும் நீர்க்குமிழி
பல வர்ணங்களும் வானவில்லே
மனிதன் நினைப்பது வாழ்க்கை
நிலைக்குமென்று
மனிதன் பிறக்கும்போதே இறப்பு
நிச்சயிக்கப் படுகிறது
எப்போது என்றுதான் யாருக்கும்
தெரிவதில்லை
அதற்கிடையில் எத்தனை ஆட்டம் பாட்டம்
இத்தனையும் நீர்க்குமிழிதானே
வாழ்க்கை வசந்த மென்று
நினைந்திருக்கையில்
வசந்தமும் வலியாக்கி
வருத்திய போது
வசந்த வாழ்க்கை
பாதியில் முடிந்தபோது
வாழ்க்கையும் நீர்க்குமிழி
எனப் புரிய வைத்தது
கெங்காஸ்ரான்லி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading