கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

முள்ளிவாய்க்கால்

பண்பட்ட நிலத்துப் பயிர்கள் புண்பட்டுக் கருகி
விண்முட்ட அதிரும் செல்லில் கண்மூடிச் சரிந்ததை
எண்ணிடக் கண்களில் இரத்தக் கண்ணீர் சொரிகிறதே!
மண்கண்ட வேதனைகளை மரணித்தாலும் மறக்கத் தகுமோ?

குஞ்சுகளின் பிஞ்சுகளின் குருதிகளும் ஆறாய் ஓடியதே
நெஞ்சு பிளக்கச் செய்கிறதே
வஞ்சகம் இல்லாப் பிஞ்சுக் குழந்தை
அரசியல் பேசியதா? அன்றி ஆயுதம் ஏந்தியதா?

மண்ணில் விளைந்த முத்துக்களின் மரணோலமும்
முள்ளிவாய்க்கால் மண்ணில் மடிந்த மாந்தரை
எண்ணித் துடியாய் துடிக்குது மனமே!
கண்ணீர் ஆறாய்ப் பெருக கதறி நின்றோமன்று….

கோசலா ஞானம்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading