சித்திரா பருவம் 760 30.04.2026

செல்வி நித்தியானந்தன் சித்திரா பருவம் அன்னையருக்கு வருடம் ஒருமுறை அழகாய் வந்திடும் விரதமாகும் ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி அகமே நிறைந்து...

Continue reading

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் கவி
பொறுமையில் பூமாதேவி

பெண்ணவள் பெற்றிட்ட பேறு பூமியில்
பேதையவள் பொறுமையில் பூமா தேவி
கண்ணெனக் காத்திட்டால் கலங்காது வாழ்வாள் – ஆனால்
கசக்கிப் பிழிந்திடுவார் கண்விழி நீர்வடிய

பேச்சுக்கு மறுவார்த்தை பேசாத பெண்கள்
பலருண்டு இந்தப் புவியில்
மூச்சு வாங்கி மூச்சு வாங்கி
முழுப்பொ றுப்பையும் முந்தா னையிலே

முடிந்துமே முழித்திடுவாள் முழியும் பிதுங்கிட
மகவுப் பேற்றிலே மறுபிறப்புக் காண்பவள்
படித்துப் பட்டமும் பெற்றிடுவாள் அதனால்
புவிக்கு ஒப்பாக புனைந்தாரோ பெண்ணவளை….

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading