” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

பெற்றிட்ட பேறு பேரப் பிள்ளைகள்

பெற்றிட்ட பேறில் பெருமையும் வந்திடும் – பேரப்
பிள்ளைகள் முத்தம் பூரிப்பால் மகிழ்வுறும்
வற்றாக் கடலாய் விடியலைத் தந்திடும்
வந்திடும் இன்பம் வரமாய்ச் சுரந்திடும்

வெள்ளை மனத்துடன் வேடிக்கை காட்ட
உள்ளம் பொங்கிடும் உவகை என்னே!!!
கள்ளம் இல்லைக் கபடம் இல்லை
கொஞ்சிக் குலாவிக் குதூகலம் காண்கையில்

பெற்றிட்ட பேறு பேரப் பிள்ளைகள்
கற்றுத் தருகிறார் களிப்பின் பெருமையை
உற்றுப் பார்த்து உவகை அடைவோம்
உழலும் மனதுக்கு உரமாய் எடுப்போம்…

Nada Mohan
Author: Nada Mohan