தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு
பூத்திடுவாள் தைமகளும்

உழவர் மனமெல்லாம் உளமகிழ்வு அடைந்திடவே
ஊக்கம் பலன்தரவே உண்டியும் நிரம்பிடவே
கழனியும் விளைந்திருக்கு கதிரவனின் ஒளியாலே

பூக்கட்டும் தைமகளும் புதுப்பொலிவு பிறந்திடவே
பொலிந்திருக்கும் நெல்மணிகள் புத்தரிசிப் பொங்கலிட
மாக்களெல்லாம் மகிழ்வடைய மணிமணியாய் நெல்மணிகள்
மனதையும் குளிர்விக்க முத்துமுத்தாய் விளைந்திருக்கும்

கதிரவனின் வரவுகண்டு கமக்காரன் களிப்படைந்து
கோலமிட்டு கரும்புநட்டு தோரணமும் கட்டியுமே
துதிபாடிப் பொங்கலிட்டு துதித்துடுவார் தமிழரெல்லாம்
தரணியெல்லாம் பொங்கலிடப் பூத்திடுவாள் தைமகளும்.

கோசலா ஞானம்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading