கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு
பூத்திடுவாள் தைமகளும்

உழவர் மனமெல்லாம் உளமகிழ்வு அடைந்திடவே
ஊக்கம் பலன்தரவே உண்டியும் நிரம்பிடவே
கழனியும் விளைந்திருக்கு கதிரவனின் ஒளியாலே

பூக்கட்டும் தைமகளும் புதுப்பொலிவு பிறந்திடவே
பொலிந்திருக்கும் நெல்மணிகள் புத்தரிசிப் பொங்கலிட
மாக்களெல்லாம் மகிழ்வடைய மணிமணியாய் நெல்மணிகள்
மனதையும் குளிர்விக்க முத்துமுத்தாய் விளைந்திருக்கும்

கதிரவனின் வரவுகண்டு கமக்காரன் களிப்படைந்து
கோலமிட்டு கரும்புநட்டு தோரணமும் கட்டியுமே
துதிபாடிப் பொங்கலிட்டு துதித்துடுவார் தமிழரெல்லாம்
தரணியெல்லாம் பொங்கலிடப் பூத்திடுவாள் தைமகளும்.

கோசலா ஞானம்.

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading