பாசத்தின் பகிர்வினிலே

பாசத்தின் பகிர்வினிலே பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே வாசமுல்லை விரிந்தது...

Continue reading

பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 275

ஓலம்

என் உயிருக்குள்
ஒர் உயிராக
ஐந்து திங்கள்
வளர்ந்த என்
சுடரே …. வளர்மதியே !

உன் வளர்ச்சி
குன்றியது ஏனோ
உன்னை அஸ்தமிக்க
செய்தார்கள்!
ஐயோ!!….

வளர் தளிரில்
வந்த கனவுகள்
நினைவில் வாட்டுதே

சுடும் இரவுகள்
மலர் விழியினை
குளமாக்க
அலர விழி மறுக்குதே

கணம் என்னைப் புரிய
காலன் ஏன் மறந்தானோ?

வளர் பொழுது களில்
முழு மதியேன
கால அறுவடை பெற
காத்திருப்பேன் மீண்டும்
உனக்காக ……என்றும்

அம்மா

குமரன்

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading