க.குமரன் 14.3.23

சந்தம் சிந்தும்
வாரம் 214

தீ

அனல் வளர்த்து
பூவை பாதம்
பதித்து
தொழும் தேவி
மனம் குளிர
வேண்டும் வரம்
கேட்டாள் !

காது அணி
எறிந்து
காணும் அம்புலி
காட்டியவளுக்கு

சீதை அக்கினி
பிரவேசமும்
பாண்டி நாட்டை
எரித்ததுவும்

பார் கண்ட
பின்னே..
கோதை வேண்டுதலுக்கு
பரிவாவள்
திரிபுர தேவி

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading