க.குமரன் 27.4.23

வியாழன் கவி
ஆக்கம் 111

வளர்ந்த குழந்தைகள் தாமே!

எழுதிடும் கவிகள்
வலியினைக் தாங்குமா
வரியதின் வழிதனில்
மன வலி போக்குமா ?

சிறகுகள் ஒடித்திட
பறவைகள் பறக்குமா
பறந்திட உதவிட
வார்த்தைகள் போதுமா ?

தாங்கும் இதயங்கள்
சார்பதை தேடுமா?
வருகின்ற நாட்களில்
வழித்துனை தோன்றுமா?

புலர்ந்திடும் பொழுதுகள்
விடிவதைக் காட்டுமா?
கரங்களைக் கூப்பி
கடவுளை நாடி

நலம் வளம் பெற
நம்பிக்கை கொள்வோமா!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading