கணப்பொழுதில்

கணப்பொழுதில்.. சிவருபன் சர்வேஸ்வரி கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி முடிக்கும் காரியம் தெரியாதவர்...

Continue reading

க.குமரன்

வியாழன் கவி
ஆக்கம் 96

பேசாமல் பேசும் உலக மொழி

ஒலி இன்றிய உலகம்
எனதாகிப் போச்சு
அமைதி எனது
மனதில்
நிசப்தம் என
கொள்ளலாமே!

கண்கள் பேசும்
கவிதையை
கருத்தினில்
நாளும் உணர்வேனே !

சொல்லும் உதட்டின்
குவிதலைப் பார்த்து
குறி கொண்டு
செய்தியை அறிந்திடுவேனே!

விரல் அங்க
அபிநயமும்
எழுத்தறிவும்
விரைந்து பேசும்
செயற்திறனை
தந்திடுமே !

தடைகள் ஏதுமில்லை
தயக்கங்களை. மனதில்
களைந்தால்

பேசாமலும் பேசலாம்
பேதமையையும்
போக்கிடலாமே !!!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan