மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

க.குமரன்

வியாழன் கவி
ஆக்கம் 96

பேசாமல் பேசும் உலக மொழி

ஒலி இன்றிய உலகம்
எனதாகிப் போச்சு
அமைதி எனது
மனதில்
நிசப்தம் என
கொள்ளலாமே!

கண்கள் பேசும்
கவிதையை
கருத்தினில்
நாளும் உணர்வேனே !

சொல்லும் உதட்டின்
குவிதலைப் பார்த்து
குறி கொண்டு
செய்தியை அறிந்திடுவேனே!

விரல் அங்க
அபிநயமும்
எழுத்தறிவும்
விரைந்து பேசும்
செயற்திறனை
தந்திடுமே !

தடைகள் ஏதுமில்லை
தயக்கங்களை. மனதில்
களைந்தால்

பேசாமலும் பேசலாம்
பேதமையையும்
போக்கிடலாமே !!!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading