விடுப்பு..!!

விடுப்பு விடுமுறை பயணம் நன்றாய் அமைய வேலைப் பழுவும் கொஞ்சம் அதிகரிக்க ஆலயங்கள்திருவிழா அயலில் கொண்டாட அலுப்பு இன்றியே நானும் நகர்ந்திட உடலும் கொஞ்சம் உற்சாக பெற்றிட தண்ணீர்...

Continue reading

க.குமரன்

வியாழன் கவி
ஆக்கம் 97
நவராத்திரி

வாணி உந்தன்
வீணை யேன
நானும் உந்தன்
மடியில் தங்குவேனோ !

மீட்டும் விரலின்
ஓசை நயம்
கேட்கும் சந்த
ஜதியின் சுரம்

காட்டும் அந்த
கலையின் வரம்
மாற்றும் எந்தன்
மனதின் லயம்

ஏங்கும் எனது
கலை தாகம்
ஏகமாக அரங்கேற
கலை வாணியே!
உந்தன் வரம்
வேண்டி!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading