நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

க.குமரன்

வியாழன் கவி
ஆக்கம் 97
நவராத்திரி

வாணி உந்தன்
வீணை யேன
நானும் உந்தன்
மடியில் தங்குவேனோ !

மீட்டும் விரலின்
ஓசை நயம்
கேட்கும் சந்த
ஜதியின் சுரம்

காட்டும் அந்த
கலையின் வரம்
மாற்றும் எந்தன்
மனதின் லயம்

ஏங்கும் எனது
கலை தாகம்
ஏகமாக அரங்கேற
கலை வாணியே!
உந்தன் வரம்
வேண்டி!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan