கணப்பொழுதில்

கணப்பொழுதில்.. சிவருபன் சர்வேஸ்வரி கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி முடிக்கும் காரியம் தெரியாதவர்...

Continue reading

சக்தி சக்திதாசன்

தேடித் தேடி தாவுகிறேன்
தேன்தமிழை நாடி ஓடுகிறேன்
வாடிவாடிக் காய்கிறேன் கவிதை
வடிக்க முடியா வேளைகளில்

மூடிமூடி வைத்திருந்த எந்தன்
முத்தமிழ் மோக உணர்வுகளை
சூடிச்சூடி மகிழ்கிறேன் தாளில்
சுந்தரத் தமிழ் மாலைகளாய்

கோடிகோடி பொன் தந்தாலும்
கொள்ளுமோ எந்தன் தாய்மொழியை
கூடிக்கூடிக் களித்திடுவேன் காணும்
கவிஞர்கள் குழுவின் மத்தியில்

பாடிப்பாடி வைத்திடுவேன் வாழ்வில்
பைந்தமிழ் மொழியின் பெருமைகளை
ஆடிஆடிக் களித்திடும் தமிழ்க்கலைகளை
ஆனந்தமாய் போற்றிக் களித்திடுவேன்

ஓடிஓடி அறிந்திடுவேன் தமிழன்னையின்
ஒப்பற்ற தன்மைகளை வாழும்வரை
ஓங்கிச் சொல்வேன் தமிழனென்று
ஒப்பில்லா மொழி தமிழ்மொழியென்றே

Nada Mohan
Author: Nada Mohan