சித்திரா பருவம் 760 30.04.2026

செல்வி நித்தியானந்தன் சித்திரா பருவம் அன்னையருக்கு வருடம் ஒருமுறை அழகாய் வந்திடும் விரதமாகும் ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி அகமே நிறைந்து...

Continue reading

சக்தி சக்திதாசன்

தேடித் தேடி தாவுகிறேன்
தேன்தமிழை நாடி ஓடுகிறேன்
வாடிவாடிக் காய்கிறேன் கவிதை
வடிக்க முடியா வேளைகளில்

மூடிமூடி வைத்திருந்த எந்தன்
முத்தமிழ் மோக உணர்வுகளை
சூடிச்சூடி மகிழ்கிறேன் தாளில்
சுந்தரத் தமிழ் மாலைகளாய்

கோடிகோடி பொன் தந்தாலும்
கொள்ளுமோ எந்தன் தாய்மொழியை
கூடிக்கூடிக் களித்திடுவேன் காணும்
கவிஞர்கள் குழுவின் மத்தியில்

பாடிப்பாடி வைத்திடுவேன் வாழ்வில்
பைந்தமிழ் மொழியின் பெருமைகளை
ஆடிஆடிக் களித்திடும் தமிழ்க்கலைகளை
ஆனந்தமாய் போற்றிக் களித்திடுவேன்

ஓடிஓடி அறிந்திடுவேன் தமிழன்னையின்
ஒப்பற்ற தன்மைகளை வாழும்வரை
ஓங்கிச் சொல்வேன் தமிழனென்று
ஒப்பில்லா மொழி தமிழ்மொழியென்றே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading