12
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-03-2026
தாலாட்டும் கைகளும்
தடைகளை தந்தாலும்
முன்னேற்றும் விழிப்போடு
வரலாற்றை வகுக்கிறாள்.
சமையலறையே கதியற்று
சாதிக்கும்...
12
Mar
” மாதரின் மறுபக்கம் “
ரஜனி அன்ரன் (B. A) ..." மாதரின் மறுபக்கம் " 12.03.2026
மாதர்சக்தி மாபெரும்சக்தி
மாட்சிமை...
12
Mar
சக்தி சக்திதாசன்
கனவுகளில் வழிமாறிக்
கானகத்தில் தடுமாறி
புனலாக ஓடும் காலத்தில்
புயலோடு தொலைந்து போனேன்
ஏனென்னைத் தேடுகிறாய் ?
பொய்க்கால் குதிரையிலே
போகாத ஊருக்கு
போய்ச்சேரப் புறப்பட்டு
புதை சேற்றினுள்ளே
புதைந்தே போனேன்
ஏனென்னைத் தேடுகிறாய் ?
உண்மையில்லா உலகில்
உண்மைகளின் ஊற்றைத் தேடி
உதவாத யாத்திரையில்
உருமாறிப் போனேன்
ஏனென்னைத் தேடுகிறாய் ?
கண்ணிருப்போர் உலகினிலே
குருடனாகிப் போய்
பேசத் தெரிந்தோர் புவியில்
ஊமையாகப் போனேன்
ஏனென்னைத் தேடுகிறாய் ?
உடலில் வலு உள்ளவரை
உழைத்து உழைத்து
நெஞ்சில் ஒரு துளி
ஈரமில்லா மனிதருக்கு
வாரி இறைத்து விட்டு
கல்லறை வாசலில்
காத்து இருக்கின்றேன்
ஏனென்னைத் தேடுகிறாய் ?
என்னைத் தேடும் உயிர்கள்
ஏழுலகிலும் இல்லையென்றே
எனை நானே தொலைக்கவென்று
விலாசமில்லாமல் வசிக்கின்றேன்
ஏனென்னைத் தேடுகிறாய் ?
Author: Nada Mohan
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...