09
Jul
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
09
Jul
நடிப்பு
சக்தி சிறினிசங்கர்
அன்பினைக் காட்டுவர் அசந்திட வைப்பர்
உதட்டிலே சிரிப்பு உள்ளத்திலே கசப்பு
முகத்திலே வெளிச்சம்...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
சக்தி சக்திதாசன்
கனவுகளில் வழிமாறிக்
கானகத்தில் தடுமாறி
புனலாக ஓடும் காலத்தில்
புயலோடு தொலைந்து போனேன்
ஏனென்னைத் தேடுகிறாய் ?
பொய்க்கால் குதிரையிலே
போகாத ஊருக்கு
போய்ச்சேரப் புறப்பட்டு
புதை சேற்றினுள்ளே
புதைந்தே போனேன்
ஏனென்னைத் தேடுகிறாய் ?
உண்மையில்லா உலகில்
உண்மைகளின் ஊற்றைத் தேடி
உதவாத யாத்திரையில்
உருமாறிப் போனேன்
ஏனென்னைத் தேடுகிறாய் ?
கண்ணிருப்போர் உலகினிலே
குருடனாகிப் போய்
பேசத் தெரிந்தோர் புவியில்
ஊமையாகப் போனேன்
ஏனென்னைத் தேடுகிறாய் ?
உடலில் வலு உள்ளவரை
உழைத்து உழைத்து
நெஞ்சில் ஒரு துளி
ஈரமில்லா மனிதருக்கு
வாரி இறைத்து விட்டு
கல்லறை வாசலில்
காத்து இருக்கின்றேன்
ஏனென்னைத் தேடுகிறாய் ?
என்னைத் தேடும் உயிர்கள்
ஏழுலகிலும் இல்லையென்றே
எனை நானே தொலைக்கவென்று
விலாசமில்லாமல் வசிக்கின்றேன்
ஏனென்னைத் தேடுகிறாய் ?
Author: Nada Mohan
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவிஇல 340
"நட்பு"
நாணயம் போன்றது
நானிலமும் போற்றும்
நல்ல நண்பை
ஆபத்தில் அறியலாம்!
புலத்தில் புதுமை
இனம்...
08
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
நட்பு
நாணயம் தவறாத நல்லநட்பு வேண்டுமடா
பணத்தாசை கொண்டே பாழாக்கும் எண்ணமின்றி
உயிராக இருக்கும் உன்னத...