நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

சக்தி சக்திதாசன்

கனவுகளில் வழிமாறிக்
கானகத்தில் தடுமாறி
புனலாக ஓடும் காலத்தில்
புயலோடு தொலைந்து போனேன்
ஏனென்னைத் தேடுகிறாய் ?

பொய்க்கால் குதிரையிலே
போகாத ஊருக்கு
போய்ச்சேரப் புறப்பட்டு
புதை சேற்றினுள்ளே
புதைந்தே போனேன்
ஏனென்னைத் தேடுகிறாய் ?

உண்மையில்லா உலகில்
உண்மைகளின் ஊற்றைத் தேடி
உதவாத யாத்திரையில்
உருமாறிப் போனேன்
ஏனென்னைத் தேடுகிறாய் ?

கண்ணிருப்போர் உலகினிலே
குருடனாகிப் போய்
பேசத் தெரிந்தோர் புவியில்
ஊமையாகப் போனேன்
ஏனென்னைத் தேடுகிறாய் ?

உடலில் வலு உள்ளவரை
உழைத்து உழைத்து
நெஞ்சில் ஒரு துளி
ஈரமில்லா மனிதருக்கு
வாரி இறைத்து விட்டு
கல்லறை வாசலில்
காத்து இருக்கின்றேன்
ஏனென்னைத் தேடுகிறாய் ?

என்னைத் தேடும் உயிர்கள்
ஏழுலகிலும் இல்லையென்றே
எனை நானே தொலைக்கவென்று
விலாசமில்லாமல் வசிக்கின்றேன்
ஏனென்னைத் தேடுகிறாய் ?

Nada Mohan
Author: Nada Mohan