மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

சக்தி சக்திதாசன்

கல்லல்ல இதயம்
சொல் கொண்டு தாக்க‌
மெல் எனும் உணர்வு
சுள் என்றே வலித்தது

நல் எண்ணம் கொண்டு
வல் கின்ற வினைகள் ஏனோ
முள் என்றே நெஞ்சில்
உள் கொண்டு தைக்க‌

பொல் லாத உலகில்
இல் லாமல் போனால்
நில் லாமல் ஓடும் வாழ்வு
சொல் லாமல் சொல்லும்

நான் ஒன்று நினைத்தால்
தான் ஒன்று நினைக்கும்
மேல் நிற்கும் ஒருவன்
ஊழ் கொண்டு விளையாட்டு

எது வந்த போதும் ஏற்றிடும்
மெது வான உள்ளம் தான்
பொது வாக யாவும் எனை
அது வாகத் தாக்கும் வேளை

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading