தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

சக்தி சக்திதாசன்

கல்லல்ல இதயம்
சொல் கொண்டு தாக்க‌
மெல் எனும் உணர்வு
சுள் என்றே வலித்தது

நல் எண்ணம் கொண்டு
வல் கின்ற வினைகள் ஏனோ
முள் என்றே நெஞ்சில்
உள் கொண்டு தைக்க‌

பொல் லாத உலகில்
இல் லாமல் போனால்
நில் லாமல் ஓடும் வாழ்வு
சொல் லாமல் சொல்லும்

நான் ஒன்று நினைத்தால்
தான் ஒன்று நினைக்கும்
மேல் நிற்கும் ஒருவன்
ஊழ் கொண்டு விளையாட்டு

எது வந்த போதும் ஏற்றிடும்
மெது வான உள்ளம் தான்
பொது வாக யாவும் எனை
அது வாகத் தாக்கும் வேளை

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading