” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சக்தி சக்திதாசன்

கவிதைக்கோர் தினமெனில்
கவிதையிலாத் தினமுண்டோ?
கவிதையோடு விழித்திடுவேன்
கவிதையோடு உறங்கிடுவேன்

கவிதையே வாழ்வாகவே
கண்டிட்ட கவிஞனெங்கள்
காவியத் தலைவனென்போம்
கவிதைக்கோர் பாரதியே !

கவித்துவத்தை தன்னகத்தில்
கணக்காகக் விதைத்திட்டவன்
கவியாக்கிக் களித்திட்டோன்
கவியரசர் கண்ணதாசன்

காசினியில் ஓர்தினமின்று
கவிதைக்கு கொடுத்திட்டார்
கவிதைகளாய் சிந்திக்கும்
கவியலைகள் ஆர்ப்பரிக்கும்

கவிதையாக தாய்த்தமிழதுவே
கவிதையில் தவழ்ந்திடும்
கவிதையில் மலர்ந்திடும்
கவிதையாகவே சுரந்திடும்

கவிதைகள் கனத்திடும்
கவிதைகளாய்ப் பொழிந்திடும்
கவிதைகளே தினந்தினம்
களிப்புடனே கவிந்திடும்

உலகத்தோர் அனைவரும்
உணர்வோடு கொண்டாடும்
உலகக் கவிதைத்தினமதில்
உதிர்க்கின்றேன் வாழ்த்துகளை

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan