இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

சக்தி சக்திதாசன்

இமைகளின் ஓய்வு
மனிதனின் உறக்கம்
இதயத்தின் ஓய்வு
மரணத்தின் நிகழ்வு

இருக்கின்ற போதினில்
இறக்கின்ற உணர்வுகள்
இறக்கின்ற வேளையில்
இருந்திடும் மாயங்கள்

விரிகின்ற இதழ்களில்
மலர்கின்ற புன்னகை
மாலையின் மலர்களாய்
மடிவதன் மந்திரம்

சுயத்தினை உரித்து
சித்தத்தைப் பிழிந்து
சுரந்திடும் ஞானத்தை
சுவைத்திடும் தருணங்கள்

வாழ்க்கையின் விரல்கள்
வரைந்திடும் கோலங்கள்
விளைந்திடும் சித்திரம்
விசித்திரத் தத்துவம்

நினைவெனும் அலையினில்
மிதந்திடும் கனவுகள்
அறிவின் உதயத்தில்
அழிந்திடும் அனுபவம்

அன்னையின் கருவறையில்
ஆனந்த நீச்சல்கள்
அவனியின் மடியினில்
அவலத்தின் குமுறல்கள்

இருக்கின்ற வரையில்
இல்லாத கருணையோ
இறக்கின்ற போதங்கு
இருப்பது சாத்தியமோ ?

உள்ளத்தின் வாசலில்
எத்தனை உணர்வுகள்
நுழைந்திடும் வழியறியா
நூதன ஜாலங்கள்

சுரந்திடும் வரிகளுள்
புதைந்திடும் கருத்துகள்
புரிந்திட்ட நெஞ்சத்தில்
புவனத்தின் ஞானங்கள்

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் வரலாறு பலபாகம் வழிகூறும் பலகாலம் தமிழ்ப்பள்ளி உருவாக்கம் தரணிக்கே தனிமகுடம் உறவுகள் ஓன்றாகும் உயிர்ப்பு மொழி தமிழாகும் அடுத்த தலைமுறையும்...

    Continue reading

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading