பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

சக்தி சக்திதாசன்

இமைகளின் ஓய்வு
மனிதனின் உறக்கம்
இதயத்தின் ஓய்வு
மரணத்தின் நிகழ்வு

இருக்கின்ற போதினில்
இறக்கின்ற உணர்வுகள்
இறக்கின்ற வேளையில்
இருந்திடும் மாயங்கள்

விரிகின்ற இதழ்களில்
மலர்கின்ற புன்னகை
மாலையின் மலர்களாய்
மடிவதன் மந்திரம்

சுயத்தினை உரித்து
சித்தத்தைப் பிழிந்து
சுரந்திடும் ஞானத்தை
சுவைத்திடும் தருணங்கள்

வாழ்க்கையின் விரல்கள்
வரைந்திடும் கோலங்கள்
விளைந்திடும் சித்திரம்
விசித்திரத் தத்துவம்

நினைவெனும் அலையினில்
மிதந்திடும் கனவுகள்
அறிவின் உதயத்தில்
அழிந்திடும் அனுபவம்

அன்னையின் கருவறையில்
ஆனந்த நீச்சல்கள்
அவனியின் மடியினில்
அவலத்தின் குமுறல்கள்

இருக்கின்ற வரையில்
இல்லாத கருணையோ
இறக்கின்ற போதங்கு
இருப்பது சாத்தியமோ ?

உள்ளத்தின் வாசலில்
எத்தனை உணர்வுகள்
நுழைந்திடும் வழியறியா
நூதன ஜாலங்கள்

சுரந்திடும் வரிகளுள்
புதைந்திடும் கருத்துகள்
புரிந்திட்ட நெஞ்சத்தில்
புவனத்தின் ஞானங்கள்

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading