தினம்தினமாய்….

வசந்தா ஜெகதீசன் தினம்தினமாய்---- உழைப்பின் வேரே செழிப்புறும் உருளும் நாளின் காத்திடம் அகிலப்பரிதி விழிப்புறும் ஒற்றுமைச் செதுக்கல் ஒங்கிடும் வற்றாச்சுரங்க வரம்பிலே வலிந்து...

Continue reading

மே தினமே மேதினியில் (712)

செல்வி நித்தியானந்தன் மே தினமே மேதினியில் மேதினியில் மெல்லவே வந்திடுவாய் மேஒன்றாய் கடந்து சென்றிடுவாய் மேலோர் கீழோர்...

Continue reading

சக்தி சக்திதாசன்

சற்றேனும் விலகாமல்
பற்றேதும் குறையாமல்
கற்றோதும் பண்புடன்
பெற்றோர்கள் வளர்ப்பார்கள்

முற்றேதும் கிடையாது
அற்றேகும் காலத்தும்
ஊற்றாகும் அன்புடன்
ஈற்றுவரை காப்பார்கள்

போற்றுதல் வேண்டாமல்
பற்றுதல் கொண்டெமை
கற்றோர்கள் சபையிலே
நிற்றேக வைத்திடுவார்

நற்றோதும் பண்புடன்
சுற்றோர்கள் வாழ்த்திட
சிற்றேதும் சலிப்பில்லா
வற்றாமல் அன்புசெய்வர்

சீற்றம்கொள்ளா பொறுமை
ஏற்றம்வேண்டா அருஞ்சேவை
மாற்றமில்லா அன்புமழை
பெற்றோரின் பெருங்குணமே !

குற்றமற்ற உள்ளம்கொண்டு
ஈற்றுவரை அவரைக்காத்து
போற்றியாம் பேணிநாளும்
ஏற்றிடுவோம் பெற்றோரையே !

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan