மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

சக்தி சக்திதாசன்

சற்றேனும் விலகாமல்
பற்றேதும் குறையாமல்
கற்றோதும் பண்புடன்
பெற்றோர்கள் வளர்ப்பார்கள்

முற்றேதும் கிடையாது
அற்றேகும் காலத்தும்
ஊற்றாகும் அன்புடன்
ஈற்றுவரை காப்பார்கள்

போற்றுதல் வேண்டாமல்
பற்றுதல் கொண்டெமை
கற்றோர்கள் சபையிலே
நிற்றேக வைத்திடுவார்

நற்றோதும் பண்புடன்
சுற்றோர்கள் வாழ்த்திட
சிற்றேதும் சலிப்பில்லா
வற்றாமல் அன்புசெய்வர்

சீற்றம்கொள்ளா பொறுமை
ஏற்றம்வேண்டா அருஞ்சேவை
மாற்றமில்லா அன்புமழை
பெற்றோரின் பெருங்குணமே !

குற்றமற்ற உள்ளம்கொண்டு
ஈற்றுவரை அவரைக்காத்து
போற்றியாம் பேணிநாளும்
ஏற்றிடுவோம் பெற்றோரையே !

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading