திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

சக்தி சக்திதாசன்

சற்றேனும் விலகாமல்
பற்றேதும் குறையாமல்
கற்றோதும் பண்புடன்
பெற்றோர்கள் வளர்ப்பார்கள்

முற்றேதும் கிடையாது
அற்றேகும் காலத்தும்
ஊற்றாகும் அன்புடன்
ஈற்றுவரை காப்பார்கள்

போற்றுதல் வேண்டாமல்
பற்றுதல் கொண்டெமை
கற்றோர்கள் சபையிலே
நிற்றேக வைத்திடுவார்

நற்றோதும் பண்புடன்
சுற்றோர்கள் வாழ்த்திட
சிற்றேதும் சலிப்பில்லா
வற்றாமல் அன்புசெய்வர்

சீற்றம்கொள்ளா பொறுமை
ஏற்றம்வேண்டா அருஞ்சேவை
மாற்றமில்லா அன்புமழை
பெற்றோரின் பெருங்குணமே !

குற்றமற்ற உள்ளம்கொண்டு
ஈற்றுவரை அவரைக்காத்து
போற்றியாம் பேணிநாளும்
ஏற்றிடுவோம் பெற்றோரையே !

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading