சக்தி சக்திதாசன்

மூண்ட தீ
முன்னை ஒரு பொழுதில்
ஈழத்திலே என்றெமக்கு
இயம்பியதோ இராமாயணத்தில்

மூண்ட தீ
அதனை மூட்டுவோர்
ஆயிரம் காரணங்கள்
ஆயினும் ஆகாதென்பது நீதி

மூண்ட தீ
தாண்ட முடியாத
தடைச்சுவர் எழுப்பியெமை
தாளாத சுமைக்குள் தள்ளியதே !

மூண்ட தீ
முழுதாய் எரித்தது
காலங்களாய் வாழ்ந்திட்ட
நூலகச் சொத்துக்களை

மூண்ட தீ
மூட்டியது பேதத்தை
முற்றும் அழித்தது எமது
முழுதான சகோதர வாஞ்சையை

மூண்ட தீ
ஆண்ட. வர்க்கத்தினரின்
ஆற்றாமை காட்டியெமையே
ஆறாத்துயரில் வீழ்த்தியது

மூண்ட தீ
நெஞ்சத்தை எரித்திடினும்
வஞ்சத்தைத் தாண்டி காண்போம்
கொஞ்சமேனும் அமைதியெம் வாழ்வில்

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் உழைப்பை வாழ்விற்கான கடமை ஆக்கி களைக்காது நாட்களுள் முயற்சியை தேக்கி பிழைப்பின் காலமிது வாழ்க்கையின் ஊக்கி நுழைந்து...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்_209 "பணி" செய்யும் தொழிலை செவ்வன செய் சேதாரம் ஊதாரம் சேவையுடன் செய்! கண்ணும் கருத்துமாய் கண்ணியமாய்...

    Continue reading

    ராணி சம்பந்தர் உயிரூட்டும் உருவங்கள் பயிரூட்ட நீர் ஊற்றியே வளர்த்திட்டது போலவே வாழ்வுப் போராட்டமதில் சாதித்திடவே பிறந்தோர் பணி செய்வதே தியாகம் பூரிப்பூட்டும்...

    Continue reading