சக்தி சக்திதாசன்

மூண்ட தீ
முன்னை ஒரு பொழுதில்
ஈழத்திலே என்றெமக்கு
இயம்பியதோ இராமாயணத்தில்

மூண்ட தீ
அதனை மூட்டுவோர்
ஆயிரம் காரணங்கள்
ஆயினும் ஆகாதென்பது நீதி

மூண்ட தீ
தாண்ட முடியாத
தடைச்சுவர் எழுப்பியெமை
தாளாத சுமைக்குள் தள்ளியதே !

மூண்ட தீ
முழுதாய் எரித்தது
காலங்களாய் வாழ்ந்திட்ட
நூலகச் சொத்துக்களை

மூண்ட தீ
மூட்டியது பேதத்தை
முற்றும் அழித்தது எமது
முழுதான சகோதர வாஞ்சையை

மூண்ட தீ
ஆண்ட. வர்க்கத்தினரின்
ஆற்றாமை காட்டியெமையே
ஆறாத்துயரில் வீழ்த்தியது

மூண்ட தீ
நெஞ்சத்தை எரித்திடினும்
வஞ்சத்தைத் தாண்டி காண்போம்
கொஞ்சமேனும் அமைதியெம் வாழ்வில்

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading