பாசத்தின் பகிர்வினிலே

பாசத்தின் பகிர்வினிலே பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே வாசமுல்லை விரிந்தது...

Continue reading

பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

சக்தி சக்திதாசன்

மெத்தப் படித்திட்ட
வித்தகர் பலரும்
தத்தம் வழிகளில்
தத்துவம் சொல்கிறார்

எட்டயபுரத்தின் நற்றமிழ்
பாட்டனாம் எம்பாரதியோ
விட்டகலாமல் என்றும்
சொட்டினான் கவிதையாய்

வறுமையின் பிடிக்குள்
வெறுமையை உணர்ந்து
பொறுமையாய்த் தமிழின்
பெருமையைப் போற்றினான்

கவிதைகள் வாயிலாய்
கண்டிட்ட கனவுகளை
கருத்தினில் தியானித்து
கவிகளைப் புனைந்தான்

பாரதியார் கனவென்னும்
பாரதத்தின் சுதந்திரம்
பாரதியார் எண்ணிட்ட
பாதைவழி செல்கிறதா?

மகாகவி பாரதியாரின்
மாண்புதனைக் கூறியின்று
மாகவிதைகள் படைப்போர்
மேதினியில் பலருண்டு

என்னினிய சொந்தங்களே !
ஏட்டினில் பாரதியெழுதிய
பாட்டினை உணர்ந்திட்டு
பாரினை உயர்த்துங்கள்

தனியொருவன் பசியுற்றால்
தரணியே வேண்டாமென்றிட்ட
தமிழன்னை தவப்புதல்வன்
தந்திட்ட வழிசென்றிடுவோம்

பாக்களில் மட்டுமெங்கள்
பாரதி வாழ்ந்திடவில்லை
மக்கள் வாழ்ந்திடுமுறையில்
மறையவில்லை என்றுரைப்போம்

Nada Mohan
Author: Nada Mohan