பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

சக்தி சக்திதாசன்

உள்ளதைச் சொல்லிவிடு – இல்லையேல்
தள்ளியே நின்றுவிடு
நல்லதைச் செய்துவிடு – இல்லையேல்
நயமாய் விலகிவிடு

இன்பத்தை விதைத்துவிடு – இல்லையேல்
இல்லாது சென்றுவிடு
துன்பத்தைத் துடைத்துவிடு – இல்லையேல்
தூரத்தே விலகிவிடு

நேசத்தை வளர்த்துவிடு – இல்லையேல்
நெஞ்சத்தை மறைத்துவிடு
பஞ்சத்தை அழித்துவிடு – இல்லையேல்
பசிப்பையே புசித்துவிடு

அச்சத்தை எரித்துவிடு – இல்லையேல்
ஆயுளை முடித்துவிடு
தாகத்தைத் தணித்துவிடு – இல்லையேல்
தணலாய்த் தகித்துவிடு

மனிதனாய் வாழவிடு – இல்லையேல்
மனிதத்தைத் மறந்துவிடு
மன்னிக்கக் கற்றுக்கொடு – இல்லையேல்
மாண்பினில் தாழ்ந்துவிடு

உண்மையைப் பேசிவிடு – இல்லையேல்
உள்ளத்தை மயக்கிவிடு
கண்டதைச் சொல்லிவிடு – இல்லையேல்
கண்களை இழந்துவிடு

உன்னையே அறிந்துவிடு – இல்லையேல்
உணர்வினில் மூழ்கிவிடு
ஆன்மாவை புரிந்துவிடு – இல்லையேல்
அறிவினைத் துறந்துவிடு

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

    Continue reading