சக்தி சக்திதாசன்

வாழ்க்கைக்கு பணியாகும்
சேவைக்கு பணியாகும்
ஆளுமைக்கு பணியாகும்
அனைத்துக்கும் பணியாகும்

பணியின்றி ஜகமில்லை
பணியின்றி நலமில்லை
பணியின்றி உணவில்லை
பணியின்றிப் பலனில்லை

பணியாலே ஜெயமுண்டு
பணியாலே சிறப்புண்டு
பணிகண்டு பயமுண்டு
பணியின்றி எதுவுண்டு ?

நிலமடந்தை பணியாலே
நிறைந்திடும் வளங்களே
வான்மகளின் பணியாலே
வளர்ச்சியுறும் இயற்கையே
பணி
பணிக்காகவோர் கவிதை
படைத்திடுமோர் பணி
பாரினிலே பலபணிகள்
பாவினிலே ஒலிக்கிறது

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading