சக்தி சக்திதாசன்

சிற்சில பொழுதுகள் எனை
சிறை கொள்ளும் வேளைகள்
சிறப்புறு இயற்கையின் வனப்பு
சிந்தையை மயக்கிடும் மலைப்பு

விளைந்திடும் எண்ணங்கள் யாவும்
விதைத்திடும் நிலைகொள் விதைகள்
வியப்போடு நோக்கிடும் கணங்கள்
விந்தையாய் விரித்திடும் சிறகுகள்

துடித்தொரு சிசுவாய் புவியில்
துளிர்த்திடும் நாள் முதல் வாழ்வில்
துலங்கிடும் வகைகளை புரிந்திடா
துல்லிய உணர்வுகள் பற்பல அறிவேன்

நடித்தொரு பாத்திரம் எமக்காய்
நாடகம் எழுதிய இயக்குனன் யாரோ?
நாளும் , பொழுதும் நடப்பவை அனைத்தும்
நானறிந்திட்டேனானல் அது அதிசயமே !

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading