சக்தி சக்திதாசன்

நினைவுகளால் வதைக்கிறாய்
கனவுகளால் வருடுகிறாய்
இருவேறு உலகத்தினுள்
இதயத்தைப் பிழிகின்றாய்

பார்வையால் கொன்றிட்டு
புன்னகையால் உயிர்ப்பிக்கிறாய்
ஞாபகங்களால் சூடேற்றி
நாணத்தினால் குளிரூட்டுகிறாய்

பனியாக உறையவைத்து
பகலவனாய் உருக்குகிறாய்
நெருங்கையிலே தென்றலாகி
நகர்கையிலே புயலாகிறாய்

காதலெனும் மூன்றேழுத்தாய்
காளயின் இதயத்திலேதுளிர்த்து
மோகமெனும் மூன்றெழுத்தால்
மோதியேனோ கொல்கிறாயே !

புதைத்திட்ட விதையான
பாவையுந்தன் பார்வையது
விருட்சமென விரிந்தின்று
விழுங்கிட்டதென் நெஞ்சை

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் பருவக் காலப் பாதிப்பிலே பங்கு கண்டு பொங்குவாய் உருவக் கோலச் சாதிப்பிலே முங்கியபடியே மொங்குவாய் கரும வினை...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்தகவி இலக்கம் _216 "பொங்குவாய்" தை திங்கள் வந்ததடி தோழி தரணிமெல்ல மகிழ்ந்தடி ஆதவனார் வந்தாரடி! பொங்கலிட்டோம் பூஜை...

    Continue reading