பள்ளிப் பருவத்திலே-70

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 22-05-2025 பள்ளிப் பருவத்திலே புத்தகப் பையும் சீருடையும் புன்னகை கலந்த முகப்பொலிவும் எத்திசை பார்க்கிலும் தோழிகளும்...

Continue reading

சக்தி சிறினிசங்கர்

உற்சாக வணக்கம்!
வியாழன் கவிதை நேரம்
கவிதாதலைப்பு
வழிகாட்டியவர்கள்
***********************
வரமெனவே வந்தவர்கள் வழிகாட்டி ஆனவர்கள்
கரம்பிடித்து எம்மைக் கண்காணித்து நடத்தியவர்கள்
தரமுயரந்து நாம்நிற்கத் தலையாய கடமைசெய்து
சிரமமும்தான் பாராதெமைச் சிந்தையில் இருத்தியவர்கள்
உரமூட்டி உயர்த்திட உறுதுணையொடு இருந்தவர்கள்
அரமாக இருந்தெம்மை அனுதினமும் தீட்டியவர்கள்
குருவாகக் பணிசெய்து குன்றினிலே ஏற்றியவர்கள்
உருவாக்கி ஆளாக்கிய உன்னதர்கள் ஆசான்கள்
எங்கள் கேலிகள் எவ்வளவு பொறுத்தார்கள்
தங்கள் வாழ்வினில் தன்னலம் இன்றியே
சிற்பியைப்போல் செதுக்கியவர்கள் சிந்தையில் இருத்துவோம்
அற்புத ஆசான்களை அகத்தினில் வணங்குவோம்!
கவிதை நேரத் தொகுப்பாளினிகட்கு மிகுந்த நன்றியும் பாராட்டும் உரித்தாகுக.
திரு திருமதி.நடா மோகன் அவர்களுக்கும் மிகுந்த நன்றி.
அனைத்துக் கவிப்படைப்பாளர்கட்கும் பாராட்டுகள் கூறி அன்புடனும் நன்றியுடனும் விடைபெற்றுக்கொள்கிறேன்.
நன்றி வணக்கம்!

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் அறிவாலயம் அனலானதே .... காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின்...

    Continue reading