“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

சக்தி சிறினிசங்கர்

உற்சாக வணக்கம்!
வியாழன் கவிதை!
விருப்புத் தலைப்பு
தமிழுக்கும் அமுதென்று பெயர்!
அறுசீர் விருத்தம்
சீர் வரையறை: விளம் விளம் விளம்/விளம் விளம் விளம்

வல்லினம் மெல்லினம் இடையினம்
வகைகளும் கண்டது தமிழ்மொழி
பல்வகைப் பாக்களும் பாடினர்
பாமரர் விளங்கவும் செய்தனர்
தொல்பொருள் ஆய்விலே முதலிலே
தோற்றமும் பெற்றதே தமிழ்மொழி
கொள்கையைக் குருதியில் கொண்டவன்
கொற்றவன் சபையிலே முதலிது !
தரணியில் தரமுடைத் தமிழ்மொழி
தந்திடும் இன்பமும் தேனது
பரணியும் பாடிட பக்தியே
பாரதி வள்ளுவன் பெருமையும்
உரமது தந்திடும் உத்தமர்
உயர்ந்தனர் உலகமும் அறியவே
வரமெனப் பெற்றது வாகையே
வாழ்த்துவோம் உலகெலாம் முழங்கவே!
இரத்தலும் ஆகுமோ? இல்லையே
அறம்செய விரும்பென அவ்வையும்
உரக்கவே சொன்னவள் அத்துடன்
ஊக்கமும் கைவிடேல் என்றனள்
சிரமமும் இல்லையே சிற்பமாய்
செந்தமிழ் வாழுமே என்றுமே
மரபினைக் கற்கவே மனங்களும்
மலருமே அமுதெனப் பருகவே!

கவிதைநேரத் தொகுப்பாளினிகளுக்கும் வாணி மோகனுக்கும்
வாழ்த்துகளும் நன்றியும் உரித்தாகுக!

நன்றி வணக்கம்!

Nada Mohan
Author: Nada Mohan