பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

சக்தி சிறினிசங்கர்

இனிய இரவு வணக்கம்
திரு நடா மோகன் அவர்களே
திரு ப.வை.ஜெயபாலன் அவர்களே
மற்றும் பாமுக உறவுகளே!

சந்தம் சிந்தும் சந்திப்பு
கவித்தலைப்பு
பழமை!

அறிவியலும் அனுபவமும் அடங்கியதே பழமை
சிறியவனே சிறியவளே சிந்தையிலே இருத்து
பொறுமையுடன் கேட்டிடுவாய் போதகமும் வாயில்
புறுபுறுக்கும் பாட்டனும் பாட்டியும் பாக்கை
உரலில் இடிக்கும் ஓசையும்தான் இசையே
உரமாய்த்தான் வாழ்ந்தாரே உழுதுண்டு மகிழ்ந்தாரே
வரமாய்த்தான் நாம்பெற்றோம்
வாழ்வியலின் வனப்புகள்
தரம்குறைவு என்றெனவே தள்ளிவிட
வேண்டாம்
பழங்கதைகள் சொல்லும் பக்குவமும் கண்டாயோ
வளமான வாழ்வுக்காய் வாழ்ந்துதான்
காட்டினாரே
படிப்பறிவு இல்லை பல்கலைகள் வித்தை
நடிப்பனிலே நவரசமும் நல்கும் அந்த வாழ்க்கை
பழஞ்சோறும் கஞ்சியும் பால்சோறும் உண்டு
அழகான இல்லறமும் அமைந்ததுதான் பழமை
பழமையிலே நுண்ணறிவும் பறைசாற்றும் வல்லமையும்
தலங்களிலே எத்தனை தரமுயர்ந்த சிற்பமும்தான்
பழங்காலக் கட்டிடமும் பைந்தமிழ் வரலாறும்
இலக்கியமும் கூறிடுதே இன்பமும்தான் பழமையே

ப.வை.அண்ணா உங்கள் பாரியபணி
போற்றுதற்குரியது. மிக்க நன்றி!
திரு.நடா மோகன் அவர்களே உங்களுக்கும் மிகுந்தநன்றி!!
அன்புடனும் நன்றியுடனும் விடைபெற்றுக் கொள்கிறேன்.

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading