பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

சக்தி சிறினிசங்கர்

இனிய இரவு வணக்கம்
திரு நடா மோகன் அவர்களே
திரு ப.வை.ஜெயபாலன் அவர்களே
மற்றும் பாமுக உறவுகளே!

சந்தம் சிந்தும் சந்திப்பு
கவித்தலைப்பு
பழமை!

அறிவியலும் அனுபவமும் அடங்கியதே பழமை
சிறியவனே சிறியவளே சிந்தையிலே இருத்து
பொறுமையுடன் கேட்டிடுவாய் போதகமும் வாயில்
புறுபுறுக்கும் பாட்டனும் பாட்டியும் பாக்கை
உரலில் இடிக்கும் ஓசையும்தான் இசையே
உரமாய்த்தான் வாழ்ந்தாரே உழுதுண்டு மகிழ்ந்தாரே
வரமாய்த்தான் நாம்பெற்றோம்
வாழ்வியலின் வனப்புகள்
தரம்குறைவு என்றெனவே தள்ளிவிட
வேண்டாம்
பழங்கதைகள் சொல்லும் பக்குவமும் கண்டாயோ
வளமான வாழ்வுக்காய் வாழ்ந்துதான்
காட்டினாரே
படிப்பறிவு இல்லை பல்கலைகள் வித்தை
நடிப்பனிலே நவரசமும் நல்கும் அந்த வாழ்க்கை
பழஞ்சோறும் கஞ்சியும் பால்சோறும் உண்டு
அழகான இல்லறமும் அமைந்ததுதான் பழமை
பழமையிலே நுண்ணறிவும் பறைசாற்றும் வல்லமையும்
தலங்களிலே எத்தனை தரமுயர்ந்த சிற்பமும்தான்
பழங்காலக் கட்டிடமும் பைந்தமிழ் வரலாறும்
இலக்கியமும் கூறிடுதே இன்பமும்தான் பழமையே

ப.வை.அண்ணா உங்கள் பாரியபணி
போற்றுதற்குரியது. மிக்க நன்றி!
திரு.நடா மோகன் அவர்களே உங்களுக்கும் மிகுந்தநன்றி!!
அன்புடனும் நன்றியுடனும் விடைபெற்றுக் கொள்கிறேன்.

Nada Mohan
Author: Nada Mohan